அதிமுக எம்.பிக்கள் போராட்டத்தால் நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது
டெல்லி:
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக- திமுக மோதல் மிகத் தீவிரம் அடைந்துள்ளது.
இன்றும் (வியாழக்கிழமை) லோக்சபாவில் திமுக, அதிமுக தொடர்ந்தது.
கருணாநிதி கைது விவகாரத்தில் தொடர்புடைய 3 போலீஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு வாஜ்பாய்அழைத்துள்ளதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் பிரச்சனையைக் கிளப்பினர்.
அதிமுக எம்.பியான பி.எச். பாண்டியன் தான் இந்தப் பிரச்சனையைக் கிளப்பினார். அவர் கூறுகையில், அரசியல்பழிவாங்குவதற்காகக் தான் சென்னை போலீஸ் கமிஷ்னர் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசுஅழைத்துள்ளது. திமுக பிரஷர் காரணமாகத் தான் மத்திய அரசு இப்படி நடந்து கொள்கிறது. இதை அதிமுககடுமையாக எதிர்க்கிறது என்றார்.
இதற்கு திமுக எம்.பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தவறு செய்ததால் தான் அந்த அதிகாரிகள் மீது மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கிறது என்றனர். அவர்களுக்கு அதிமுக எம்.பிக்கள் எழுந்து பதில் சொல்ல ஆரம்பிக்க இருதரப்பினரும் கடுமையாக அர்ச்சனை செய்து கொண்டனர். இதனால் அவையில் அமளிதுமளி ஏற்பட்டது.
இரு தரப்பினரையும் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் பலமுறை கேட்டுக் கொண்டார். ஆனால், அவர்கள்தொடர்ந்து மோதிக் கொண்டனர்.
இதையடுத்து முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இதில் தலையிட்டுப் பேசினார், எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மீதும்நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், அதற்கு மாநில அரசின் முன் அனுமதியை மத்தியஅரசு பெற வேண்டும்.
ஆனால், திடீரென 3 தமிழக அதிகாரிகளை மாநில அரசிடம் கேட்காமலேயே மத்திய அரசுப் பணிக்கு வாஜ்பாய்அரசு அழைத்துள்ள மரபுகளுக்கு முரணானது. கடந்த 50 ஆண்டுகளில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லைஎன்றார்.
சந்திரசேகரின் கருத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜெயபால் ரெட்டியும் பேசினார்.
அவர்களுக்கு திமுக எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, அதை எதிர்த்து அதிமுக எம்.பிக்கள் சத்தம்போட அவையில்பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
அதிமுக உறுப்பினர்கள் ஏற்படுத்திய பிரச்சனையால் நாடாளுமன்றம் சிறிது நேரம் ஸ்தம்பித்தது.












Click it and Unblock the Notifications