For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டை போடாமல் சட்டசபைக்கு போவேன்: பா.ம.க. எம்.எல்.ஏ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு சட்டைபோடாமல் போகப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான கே.முருகவேல் ராஜன் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னையில் புதன்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிற்படுத்தப்பட்டோர், மலை சாதியினருக்கு 18 சதவிகித இட ஒதுக்கீடின் அடிப்படையில் தமிழக அமைச்சரவையில்குறைந்தது 7 அமைச்சர் பதவியாவது ஜெயலலிதா அளித்திருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதாஅவ்வாறுஅமைச்சர் பதவி கொடுக்கவில்லை.

மேலும், பிற்படுத்தபட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பயனற்ற, அதிக அதிகாரமில்லாத கூட்டுறவு, பால்வளத்துறை போன்ற அமைச்சர் பதவிகளை கொடுத்து அந்த சமுதாயத்தினரை அவமானப்படுத்தி உள்ளார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக நடைபெறவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு நான்சட்டை அணியாமல் செல்வேன்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில், முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தனது அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர்,மலை சாதியினருக்கு 8 அமைச்சர் பதவிகள் கொடுத்துள்ளார். அவர்களுக்கு பொதுப்பணி துறை போன்ற முக்கியஅமைச்சரவையையும் ஒதுக்கி உள்ளார்.

சமூக நீதியை பாதுகாப்பதாக கூறிக் கொள்ளும் ஜெயலலிதா, புதுவிதமான தீண்டாமையை செயல்படுத்தி வருகிறார்என்று கூறி உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X