தேவைப்பட்டால் போலீசார் கடுமையாக நடப்பார்கள்: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேவைப்பட்டால் குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொள்வதில் தவறில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
வழக்கு விசாரணையின்போது, சில சமயங்களில் போலீசார் குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளநேரிடுகிறது. இதில் எந்தவிதத் தவறும் கிடையாது.
சட்டத்தைச் சரியாக அமல்படுத்தவும், சட்டத்தை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள்அவசியமாகின்றன.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் முயற்சியில் போலீசாருக்கு பொதுமக்களும் உதவ வேண்டும்.
அதுபோல, பொதுமக்களின் குறைகளைப் பரிவுடன் போலீசார் அணுக வேண்டும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications