மழை: மேட்டூரில் குறைவான தண்ணீர் திறப்பு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

காவிரி டெல்டா பகுதியில் தொடர்ந்து கடும் மழை பெய்துவருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்குதிறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு புதன்கிழமை மாலை முதல் குறைக்கப்பட்டது.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து சென்ற ஜுன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.அப்போது அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்தது. இதனால் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர்திறந்துவிட்ப்பட்டது.

காவிர் நீர் பிடிப்பு பகுதியிலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்குநீர் வரத்து அதிகரித்ததால், கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு உயர்ந்தது. இதையடுத்து, குறுவைசாகுபடிக்கு தொடர்ந்து நீர் திறந்து விடப்பட்டதாலும், அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை அளவுகுறைந்தததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66 அடியாக குறைந்தது.

இதனால் முறை வைத்து பாசனம் செய்யும் டெல்டா விவசாயிகளுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்துமேட்டூர் அணையில் இருந்து அதிகமாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசைகேட்டுக் கொண்டனர்.

இதை அடுத்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 20,000 கனஅடிவீதம் 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.பின்னர் அது 5,000 கன அடியாக குறைந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக காவிரி டெல்டா தஞ்சாவூர் பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால்அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும்,மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+