கருணாநிதியை உரிய நேரத்தில் சந்திப்பேன்: ராமதாஸ்
சென்னை:
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை உரிய சமயத்தில் சந்தித்துபேசுவேன் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியைஉரிய நேரத்தில் சந்தித்து பேசுவேன்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடமும், விடுதலை சிறுத்தைகள் தலைவர்திருமாவளவனுடனும் கூட பேச தயாராகவே இருக்கிறேன்.
நடைபெற இருக்கும தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் பா.ம.க பொறுப்புள்ள எதிர் கட்சியாக செயல்படும்.தமிழக அமைச்சரவையில் இருக்கும் மற்ற எதிர் கட்சிகடளுடன் இணைந்து பா.ம.கவும் பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்படும்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தக்க நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.
பாமக ஒரு சாதிக் கட்சி கிடையாது. அதைச் சாதிக் கட்சியாக பார்க்க வேண்டாம் என்றார் ராமதாஸ்.