சுதாகரனுக்கு மீண்டும் 3-நாள் ஜாமீன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிவாஜியின் 16-வது நாள் சடங்கில் கலந்துகொள்ள இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தியைத்தான் சுதாகரன் திருமணம் செய்துள்ளார். சிவாஜியின் 16-வதுநாள் சடங்கு வருகிற 6-ம் தேதி நடக்கிறது.
இவர் தனது தாத்தா சிவாஜியின் 16-வது நாள் சடங்கில் கலந்து கொள்ள இடைக்கால ஜாமீன் கேட்டு சென்னைஉயர் நீதி மன்றத்தில் மனு செய்திருந்தார்.
அந்த ஜாமீன் மனு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி மலைசுப்பிரமணியம், சுதாகரனுக்கு 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன்வழங்கினார்.
ஜாமீன் பெற்றபிறகு அவருக்கு போலீசார் மப்டியில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் பத்திரிக்கைகளுக்கோ,டிவி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களுக்கோ சுதாகரன் பேட்டியளிக்கக் கூடாது. மீண்டும் 7-ந்தேதிகாலையில் சுதாகரன் போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.