For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுதாகரனுக்கு மீண்டும் 3-நாள் ஜாமீன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிவாஜியின் 16-வது நாள் சடங்கில் கலந்துகொள்ள இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இவர் தனது உதவியாளர் கோபுஸ்ரீதர் என்பவரை தாக்கியதாகவும், போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தியைத்தான் சுதாகரன் திருமணம் செய்துள்ளார். சிவாஜியின் 16-வதுநாள் சடங்கு வருகிற 6-ம் தேதி நடக்கிறது.

இவர் தனது தாத்தா சிவாஜியின் 16-வது நாள் சடங்கில் கலந்து கொள்ள இடைக்கால ஜாமீன் கேட்டு சென்னைஉயர் நீதி மன்றத்தில் மனு செய்திருந்தார்.

அந்த ஜாமீன் மனு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி மலைசுப்பிரமணியம், சுதாகரனுக்கு 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன்வழங்கினார்.

ஜாமீன் பெற்றபிறகு அவருக்கு போலீசார் மப்டியில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் பத்திரிக்கைகளுக்கோ,டிவி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களுக்கோ சுதாகரன் பேட்டியளிக்கக் கூடாது. மீண்டும் 7-ந்தேதிகாலையில் சுதாகரன் போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X