டான்சி நில ஊழல்: ஜெ. மனு மீது நாளை விசாரணை
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனு வெள்ளிக்கிழமைவிசாரணைக்கு வருகிறது.
இது தொடர்பாக ஜெயலலிதா மீது ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமிசென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஜெயலலலிதா மற்றும் அவரது அமைச்சரவைசகாக்கள் செய்த ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்தது.
டான்சி நில பேர ஊழல் வழக்கும் அங்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில்ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தனிநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் தான் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடஇயலாமல் போனது.
தனி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல்செய்திருந்தார், அப்பீல் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை, நீதிபதி ஜெகதீசன்முன்பு விசாரணைக்கு வருகிறது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி இருப்பதால் இந்த வழக்கில் ஜெயலலிதாவின்தலையீடு இருக்கும் எனவே வழக்கு தொடர்ந்த தன்னையும் ஒரு வாதியாக இந்தவழக்கில் சேர்க்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமிசென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.