For Daily Alerts
Just In
2001-2100: அம்பேத்கர் நூற்றாண்டாக அறிவிக்க கோரிக்கை
சென்னை:
21ம் நூற்றாண்டை அம்பேத்கர் நூற்றாண்டாக அறிவிக்க வேண்டும் என்று அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம்அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளது.
அம்பேத்தகர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய முதல் தலைவர். இதனால் 21ம் நூற்றாண்டைஅம்பேத்கர் நூற்றாண்டாக அறிவிக்க வேண்டும்.
இனப் பாகுபாட்டுக்கு எதிரான மாநாடு இந்த மாதம் 31ம் தேதி முதல் அடுத்தமாதம் 7ம் தேதிவரை தென்ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளமேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டிற்கு முன், இந்த மாதம் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையிலும் ஒரு மாநாடு நடைபெறஉள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் சமூக சேவகருமான வி.ஆர். கிருஷ்ண ஐயர் உள்ளிட்ட பலர்இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றார்.
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]