சென்னை: மழையால் அடிக்கடி "பவர் கட்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து வருவதால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலைஆராய்ச்சி நிலையமும் தொடர்ந்து அறிவித்துக் கொண்டே இருக்கிறது.
இதனால் சென்னை நகரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதனால்பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக வியாழக்கிழமையன்று நகரின் பல பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டது. என்னதான் மழைபெய்தாலும், இரவு நேரத்தில் மின்விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் புழுக்கத்தில் அவதிப்பட்டனர்.
தொடர்மழை காரணமாக டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளதால் மின் விநியோகம் தடை பட்டிருக்கலாம் என்றுகூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications