நடுக்கடலில் தத்தளித்த 8 இலங்கை அகதிகள் மீட்பு
ராமேஸ்வரம்:
நடுக்கடலில் தவித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகள் 8 பேர் வியாழக்கிழமை மீட்கப்பட்டனர்.
கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவற்படையினர் இவர்களை கண்டுபிடித்துராமநாதபுரம் தாசில்தாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். உடனேஅகதிகளை மீட்குமாறு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, தாசில்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் விரைந்து சென்றுஅகதிகளை மீட்டு தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட அகதிகளில் சித்ரா (வயது 28), சாரதா (வயது 19) ஆகியோர் கூறும்போது:
இலங்கையில் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின் இலங்கை ராணுவத்தின் தாக்குதல் மிகவும்அதிகமாக உள்ளது. விடுதலை புலிகள் மீது மட்டுமல்ல. தமிழர்கள் வாழும் பகுதிகள் மீதும் இலங்கை ராணுவத்தினர்குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த தாக்குதலில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். நாங்களும் இறந்து போய்விடுவோம் என்ற பயத்தில்படகோட்டிக்கு ஒவ்வொருவரும் தால ரூ 15,000 கொடுத்து தப்பி வந்தோம். ஆனால் படகோட்டி தனுஷ்கோடிஎன்று கூறி ஒரு திட்டில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார்.
25 மணிநேரம் மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தோம். இறைவன் அருளால் நாங்கள் இப்போதுகாப்பாற்றப் பட்டுள்ளோம் என்று அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications