உற்சாகம் தரும் இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதி வளர்ச்சி
பெங்களூர்:
கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில், இந்திய சாப்ட்வேர் 6 முதல் 12 சதவிகிதம்வளர்ச்சியடைந்துள்ளதாக இந்திய சாப்ட்வேர் கம்பெனிகளின் சங்கமான "நாஸ்காம்" கூறுகிறது.
கணக்குப்படி பார்த்தால், அமெரிக்காவில் உள்ள 2 லட்சம் இந்திய சாப்ட்வேர் நிபுணர்களில் 1,500 பேர்தான்திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரத்துடன் கூறுகிறது நாஸ்காம்.
ஆனாலும், இதன் இந்தியாவில் இது எதிரொலிக்கவில்லை என்று கூறும் நாஸ்காம், இந்தியாவில் சீராக சாப்ட்வேர்தொழில் வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது என்று அடித்துக் கூறுகிறது.
நாஸ்காம் வெளியிடும் புள்ளி விவரங்களும் அப்படித்தான் கூறுகின்றன. இந்த ஆண்டின் சாப்ட்வேர் வளர்ச்சியின்இலக்கு ரூ.40,000 கோடி என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இந்த இலக்கை நிச்சயம் எட்டி விடுவார்கள் போலத்தான் தெரிகிறது. ஏனென்றால், கடந்த சில ஆண்டுகளாகவே,ஒவ்வொரு ஆண்டும் 35 சதவிகிதம் சாப்ட்வேர் ஏற்றுமதி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
2008ல் நம்முடைய சாப்ட்வேர் ஏற்றுமதியும் எவ்வளவு இருக்கும் என்று இப்போதே நிர்ணயித்துள்ளது நாஸ்காம்.அந்த ஆண்டில் மட்டும் ரூ.2,50,000 மதிப்புள்ள சாப்ட்வேர்களை ஏற்றுமதி செய்யப் போவதாக நாஸ்காம் இலக்குநிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் சிற்சில சிறிய சாப்ட்வேர் கம்பெனிகளில் மட்டுமே சாப்ட்வேர் நிபுணர்களை "லே ஆப்" கொடுத்துஅனுப்பும் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலும், சாப்ட்வேர் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே வருவதாகத்தான்கூறப்படுகிறது.
இந்த் சிறிய சாப்ட்வேர் கம்பெனிகள்தான், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டன.தற்போது, இந்தச் சிறு கம்பெனிகளைக் கை கொடுத்து தூக்கி விடுவதற்கும் பெரிய சாப்ட்வேர் கம்பெனிகள் முன்வந்துள்ளதாக நாஸ்காம் நம்பிக்கையுடன் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications