போலீசார் மீது தாமரைக்கனி கிரிமினல் வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்:
போலீசார் தன்னைத் தாக்கியதாக தாமரைக்கனி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கிரிமினல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த தேர்தலில் இவருக்கு அதிமுகவில் சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் இவர் கட்சியிலிருந்து விலகிதனித்துப் போட்டியிட்டுத் தோற்றார். இவரது மகன்தான் அதிமுக சார்பில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர்.
இந்நிலையில், கடந்த மாதம் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக போலீசார் இவரையும் கைது செய்தனர். அப்போது தன்னைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்துள்ளார் தாமரைக்கனி.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் 30-ம் தேதி காலை 7 மணிக்கு இன்ஸ்பெக்டர் முருகேசன் , சப்-இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் ஆகிய 2போலீசார் என்னை கைது செய்ய வந்தனர்.
அப்போது, நான் மருந்து சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று கூறினேன். அதைக் கேட்காமல் உடனே வரும்படிஎன்னை அடித்துத் தள்ளினர். மேலும் என்னைச் சிறைக்குக் கூட்டிச் செல்லும் போது வேனிலும் தாக்கினர்.
இதனால் எனது வலது தொடையிலும், இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிறகு நான் மருத்துவமனையில்அனுமதிக்கப் பட்டேன். இப்போதும் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
ஆட்சியாளர்களைத் திருப்திப் படுத்த என்னை துன்புறுத்திய அந்த 2 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தாமரைக்கனி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications