For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிந்தித்து முடிவெடுங்கள் - கருணாநிதிக்கு திருமாவளவன் அட்வைஸ்

By Staff
Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி:

தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்க்கும் முன் கருணாநிதி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகில் கூத்தகுடியில் அவர் பேசியதாவது:

தலித்துகளின் நலனுக்காக நான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டேன். என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்றநோக்கத்தில் தலித் மக்களை வாக்களிக்க விடாமல் பாமகவினர் அடித்து விரட்டினர்.

இதை மறக்க முடியாது. பாமக உள்ள கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இருக்காது என்று அப்போதேஉறுதியாகக் கூறினேன்.

அ.தி.மு.க. கூட்டணியில் மூப்பானருடன் இருந்து, ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுத்தோம். ஆனால், ராமதாஸ்வந்ததும் ஜெயலலிதா என்னை அழைத்து ஆலோசனை செய்யாமல் விடுதலை சிறுத்தை அமைப்பைஉதாசீனப்படுத்தினார். எனவே அ.தி.மு.க.கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க.கூட்டணியில் இணைந்தோம்.

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் இணைந்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. தே.ஜ.கூட்டணியில் பாமகவை சேர்ப்பதற்கு முன் என்னை அழைத்து ஆலோசனை செய்வதாக கருணாநிதி கூறியுள்ளார்.

பாமகவை தி.மு.க. கூட்டணியில் சேர்க்கும் முன் நன்கு யோசிக்க வேண்டும் என்று கருணாநிதிக்கு நான்வேண்டுகோள் விடுக்கிறேன் என்று திருமாவளன் பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X