"திண்டிவனத்தில் குண்டு வெடிக்கும்" - மிரட்டல் கடிதம்
திண்டிவனம்:
திண்டிவனம் ரயில் நிலைய அதிகாரிக்கு வந்த ஒரு மிரட்டல் கடிதத்தில், இந்த மாதம் 15ம் தேதிக்குள் திண்டிவனம்அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பாஷா, மதானி மற்றும் அவருடன் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அனைவரையும் உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும். கொளத்தூர் மணிக்கு போலீசார் எந்த விதமான தொல்லையும் கொடுக்கக்கூடாது.
வீரப்பனைப் பிடிப்பதற்காக காட்டுக்குள் அனுப்பப்பட்டிருக்கும் அதிரடிப்படையினர் உடனடியாக வாபஸ் பெறவேண்டும். அதிரடிப்படையினரால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் வெடிகுண்டு வெடித் போது, அந்த வெடிவிபத்தில் இறந்த முஸ்லிம்குடுப்பத்தினருக்கும், வெடிவிபத்தில் காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கும் உடனடியாக வீடு மற்றும் பண உதவிசெய்ய வேண்டும்.
இந்த மாதம் 15ம் தேதி திண்டிவனத்தில் இருந்து 35 கிலோமீட்டருக்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ரிமோட் மூலம்வெடிக்க வைக்கப்படும் என்று அந்த கடிதத்தில் மிரட்டல் விடப்பட்டுள்ளது.
கடிதத்தில் இங்ஙனம் விடுதலைப் படையினர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தில் கோயம்புத்தூர்தபால் அலுவலக முத்திரை காணப்படுவதால் இந்த கடிதம் கோயம்புத்தூரில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்என்று ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
இந்த கடிதம் குறித்து ரயில்வே உயர்அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து திண்டிவனம் ரயில்நிலையம் மற்றும் அருகே உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
படித்த முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.