கருணாநிதி- இளங்கோவன் சந்திப்பு: புதிய உறவுக்கு காங். முயற்சியா?
சென்னை:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியை மனிதாபிமானத்தில் தான்சந்தித்தேன். இதில் அரசியல் ஏதும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
அவரை நேற்று இளங்கோவன் மருத்துவமனையில் சென்று சந்தித்தார். ஏற்கனவே, தனது கூட்டணியில்தலைவியான ஜெயலலிதாவுடன் தொடர்ந்து மோதி வரும் இளங்கோவன் திடீரென கருணாநிதியைச் சந்தித்ததுபல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
கருணாநிதி கைது விவகாரத்தில் ஜெயலலிதா அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது. இதனால், மத்திய பா.ஜ.க. அரசு மீது திமுக அதிருப்தியுடன் உள்ளது.
அதே போல சோனியா முதல் இளங்கோவன் வரை அனைவரையும் திட்டி வருகிறது அதிமுக. சரியான சந்தர்ப்பம்கிடைத்தால் இரு கட்சிகளுமே ஒன்றை ஒன்று வெட்டிவிடக் காத்திருக்கின்றன.
ராஜிவ் கொலைக்குப் பின் விடுதலைப் புலிகளுடனான உறவை திமுக ஒட்டு மொத்தமாக துண்டித்துவிட்டது.பா.ஜ.க. மீது கோபமாக இருக்கும் திமுகவை தன் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயல்வதாகத் தெரிகிறது. இதன் முதல்முயற்சியாகத் தான் இளங்கோவனை விட்டு கருணாநிதியின் உடல் நலம் விசாரித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.
உடனடியாக கூட்டணி ஏதும் சாத்தியமில்லை என்றாலும் ஜெயலலிதாவுக்கு ஒரு எச்சரிக்கை தரவும்கருணாநிதியுடன் புதிய உறவுக்கு அச்சாரமிடுகிறது காங்கிரஸ்.
ஆனால், கருணாநிதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த இளங்கோவன் கூறுகையில், நானும் ஒரு அரசியல் கட்சித்தலைவன். அவரும் ஒரு அரசியல் கட்சிதக் தலைவர். உடல் நலமின்றி அவதிப்படும் அவரை தனிப்பட்ட முறையில்தான் சந்தித்தேன். இதில் அரசியல் முக்கியத்துவம் ஏதுமில்லை என்றார்.
இதே போலத் தான் முன்பு கருணாநிதியை சிறையில் சந்தித்துவிட்டு வந்த ராமதாசும் கூறினார். ஆனால், அடுத்த சிலதினங்களிலேயே அதிமுக கூட்டணிக்கு முழுக்குப் போட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications