மோசடியின் பெயரால் மோசடி: 2 பேர் கைது
சென்னை:
போலி நிதி நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்த முதலீட்டாளர்களிடம் அந்தப்பணத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
இதை நம்பிய ஏராளமானவர்கள் கணேஷை அணுகினர். அவர்களிடம் ரூ. 50யைபதிவுக் கட்டணமாக பெற்றுக் கொண்டு பின்னர் தொடர்பு கொள்வதாக அனுப்பிஉள்ளார் கணேஷ்.
இதே ஆயிரக்கணக்கான முதலீட்டார்களிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளார்.ஆனால் யாருக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இது குறித்துசென்னை பெருநகர குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் ஹனீபாவிடம் முதலீட்டாளர்கள்புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கணேஷ் மற்றும் அவரது நண்பர் பிரகாஷ் ஆகியோரை போலீசார்கைது செய்தனர்.
ஏற்கனவே, போலி நிதி நிறுவனங்களில் பணத்தைப் போட்டுவிட்டு அவர்கள்ஏமாற்றியதால் வாழ்க்கையே வெறுத்துப் போயுள்ள பொது மக்களை மீண்டும் ஏமாற்றபுதிய கும்பல்கள் புறப்பட்டுள்ளன. அதில் முதலில் சிக்கியுள்ளவர் தான் கணேஷ்.
மேலும் பலர் இது போல தமிழகம் முழுவதும் மோசடி செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications