ஏவுகணையில் ஜெர்மன் கருவிகளை இந்தியா பயன்படுத்தியதா?
டெல்லி:
இந்திய தனது ஏவுகணைத் தயாரிப்புக்காக ஜெர்மனி நாட்டு கருவிகளை பயன்படுத்திள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனல், இதை இந்தியா மறுத்துள்ளது. மேலும் ஏவுகணைத் தொழில்நுட்ப பரவல் தடுப்புவிதிகளை நாங்கள் மீறவில்லை என்றும் இந்தியா கூறியுள்ளது.
விதிகளை மீறி 8 ஹைட்ராலிக் சிலிண்டர்களை இந்த நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கியதாக ஜெர்மன் அரசுகூறுகிறது. இந்த சிலிண்டர்களை 1977ம் ஆண்டு இந்தியா ஏவிய அக்னி ஏவுகணையில் பயன்படுத்தியுள்ளதாகஅந்த அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதையடுத்து கடந்த புதன்கிழமை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் திடீர் சோதனைநடத்தினார்கள்.
இந் நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இது குறித்து விளக்கமளித்துள்ளனர்.
வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜெர்மனியிடம் எந்த ஒரு கருவியையும் நாங்கள் வாங்கி ஏவுகணைகளில் பயன்படுத்தவில்லை. ஏவுகணைத்தொழில்நுட்ப பரவல் தடுப்புத் திட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. இருப்பினும் ஏவுகணைத் தொழில்நுட்பபரவல் தடுப்பு விதிகளை இந்தியா இதுவரை மீறியதில்லை.
மேலும் இந்த விஷயத்தில் சர்வதேச ஒப்பந்தங்களைப் பின்பற்றுவதில் இந்தியா ஒரு நேர்மையான நாடாகவேஇருந்து வருகிறது. பேரழிவுகளை உருவாக்கும் அணுக்கருத் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த விஷயத்திலும் எந்தசர்வதேச விதிகளையும் இந்தியா மீறியதில்லை.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.