மேலும் 3 தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளை இழுக்க மத்திய அரசு முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முத்துக்கருப்பன் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை அனுப்ப முடியாது என்று கூறி தமிழக அரசு அனுப்பியகடிதத்தை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து மேலும் 3 ஐ.பி.எஸ்அதிகாரிகளையும் மத்திய அரசுப் பணிக்கு வருமாறு கோரி உத்தரவு அனுப்பவும் மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை மாநகர் போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் மற்றும் ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன் ஆகிய 3 ஐ.பி.எஸ்அதிகாரிகளையும் மத்திய அரசுப் பணிக்கு அனுப்புமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தர பிறப்பித்தது.அதற்கு தமிழக அரசு அவர்களை அனுப்பமுடியாது என்று கூறி விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியது.

இந்த விளக்கத்தைப் பரிசீலனை செய்த மத்திய அரசு அதை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.இவர்கள் தவிர மேலும் 3 அதிகாரிகளை மத்திய அரசுப்பணிக்கு வருமாறு நேரடியாக அழைக்கவும் முடிவுசெய்துள்ளதாத் தெரிகிறது.

இந்த அதிகாரிகள் பட்டியலையும் மத்திய அரசு தயார் செய்துவிட்டது. ஆனால், பெயர் பட்டியலை இன்னும்வெளியிடவில்லை.

இதன்மூலம் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் புதிய மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மத்திய அரசு நேரடியாக உத்தரவு பிறப்பித்து வரச் சொன்னால், முத்துக்கருப்பனும் பிற 2 அதிகாரிகளும் நடுவர்மன்ற தீர்ப்பாயத்தில் புகார் தருவார்கள்.

அவர்களின் புகாரை எதிர் கொள்ளத் தான் புதிதாக 3 அதிகாரிகளையும் மத்திய அரசு கோரியிருப்பதாகத்தெரிகிறது. கருணாநிதி கைதில் தொடர்புடைய அதிகாரிகள் மட்டுமின்றி வேறு 3 அதிகாரிகளையும் அனுப்பக்கோரினால், தனது செயலில் அரசியல் காரணம் ஏதும் இல்லை என நடுவர் மன்றத்திடம் மத்திய அரசு எளிதாகவாதாட முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+