டான்சி வழக்கு: 2 நீதிபதிகள் விசாரிக்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி ஊழல் வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை 2 நீதிபதிகள்விசாரிக்க உள்ளனர்.இதனால் தான் வெள்ளிக்கிழமை இந்த மனு மீது விசாரணைநடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

டான்சி நில பேர ஊழல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றம்சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் அவர் இந்த வழக்கு விசாரணையில் தலையிடக்கூடும் என்றும், இந்த வழக்கைத் தொடர்ந்த தன்னையும் வழக்கில் வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர்சுப்ரமணியம் சுவாமியும் ஒரு மனு தாக்கல் செய்திருநத்தார்.

வெள்ளிக்கிழமை ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதாகஇருந்தது. ஆனால் திட்டமிட்டபடி விசாரணை நடைபெறவில்லை. இது பலருக்கும்ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை 2 நீதிபதிகள் விசாரிக்க இருப்பதால்தான்வெள்ளிக்கிழமை மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரிப்பதாக இருந்த சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் மீது நம்பிக்கை இல்லாத சில வக்கீல்கள் சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயினை சந்தித்து வழக்கு மிகவும் முக்கியமானதுஎன்பதால் இன்னொரு நீதிபதியும் சேர்த்து 2 பேர் கொண்ட பெஞ்ச் விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதை ஏற்ற தலைமை நீதிபதி ஜெயின் விசாரணைக்கு வரவிருந்த மேல்முறையீட்டுமனுவை நிறுத்தி வைத்தார். இதன் காரணமாகவே மேல்முறையீட்டு மனுவெள்ளிக்கிமை விசாரணைக்கு வரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+