6 மாதங்களில் 7 லட்சம் வழக்குகளை முடித்து தமிழகம் சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த 6 மாத காலத்தில் 7 லட்சம் வழக்குகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றநீதிபதி என்.கே. ஜெயின் கூறி உள்ளார்.

தமிழ்நாடு நீதித்துறை அதிகாரிகள் சங்கம் சார்பில் சங்க கையேடு வெளியீட்டு விழா சென்னை அடையாறில் உள்ளஐ.ஐ.டி. வளாகத்தில் சனிக்கிழமை நடந்தது.

கையேட்டை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கே.ஜெயின் வெளியிட்டார். நீதித்துறை சங்க சி.டியையும் அவர்வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது:

இந்த கையேடு தமிழ்நாட்டில் இப்போதுதான் முதல்முறை.ாக வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் அனைத்துநீதிபதிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இதை ஒரு சாதனை என்று கூறலாம்.

நீதிபதிகள் வழக்குகளை வேகமாக முடிக்க வேண்டும். பழைய வழக்குகளை நீண்ட நாட்கள் தேங்கவிடாமல்விரைவாக முடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 689 நீதிபதிகளில் 650 பேர், கடந்த ஆண்டு மட்டும் 13 லட்சத்து 40 ஆயிரத்து 998வழக்குகளை முடித்து உள்ளனர். இதில் 22,000 வழக்குகள் 7 வருடங்களுக்கு மேலாக நிலுவையில்இருந்தவையாகும்.

இந்த ஆண்டு, கடந்த 6 மாதங்களில் மட்டும் 6 லட்சத்து 96 ஆயிரத்து 896 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.இவற்றில் 10,000 வழக்குகள் 7 வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகளாகும்.

மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிபதி, போலீஸ் கமிஷனர் ஒத்துழைப்போடு சுமார் 10,000 வழக்குகைளமுடித்துள்ளார். இதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் 30 அதி விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்றங்களில் மாவட்டநீதிபதிகள் பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.

பொதுமக்களுக்கு உதவும் விதமாக சட்ட உதவி மையங்கள் சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில்அமைக்கப்படும். இதில் சட்டக்கல்லூரி மாணவர்களும் பங்கேற்று பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+