காஷ்மீர்: 3 தீவிரவாதிகள் உள்பட 6 பேர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்தசண்டையில் 3 தீவிரவாதிகள், ஒரு படை வீரர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோல், நேற்று (சனிக்கிழமை) இரவு நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அவர்களிடமிருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் சில வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
மத்திய காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் கால்வான்புரா என்ற இடத்தில் தனிப்போலீஸ் படைக்கும்தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் அப்துல்ரஷீத் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டான்.
முன்னதாக குலாம்முகம்து, கான்சாகிப் மற்றும் பிலால் அகமது ஆகிய 3 பேரைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுகொலைசெய்தனர்.
மேலும், சோக்புரா என்ற இடத்திலிருந்து தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 2 போலீசார் அங்கிருந்து தப்பிஇன்று அதிகாலை ஓடிவந்து விட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, 17 அப்பாவி இந்துக்களை காஷ்மீர் தீவிரவாதிகள் வரிசையாக நிற்க வைத்துச்சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications