ராஜகோபாலனையும் அனுப்ப முடியாது: ஜெ. கடிதம்
சென்னை:
ஐ.பி.எஸ். அதிகாரி ராஜகோபாலனையும் மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப முடியாது என்று தமிழக அரசு மத்தியஅரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
நீண்ட நாட்களாக இதைப் பற்றி மூச்சு விடாத தமிழக அரசு, வெள்ளிக்கிழமை மத்திய அரசுக்கு இதற்கான பதில்கடிதத்தை அனுப்பியுள்ளது.
அதில், போலீஸ் அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் வகையில், ராஜகோபாலனின் சேவை தமிழக அரசுக்குக்கட்டாயம் தேவை. எனவே அவரை இப்போது மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப இயலாது என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கறுப்புப் பூனைப் படைக்கு சரியான தலைமை நியமிக்கப் படாததால், மத்திய அரசு இந்தக் கடிதத்தைப்பார்த்து மேலும் கோபமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, மத்திய அரசு கேட்டிருந்த சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் உள்பட 3 போலீஸ்அதிகாரிகளையும் அனுப்ப மறுத்து கடந்த வாரமே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications