விழுப்புரம் அருகே "இறந்தவர்" உயிருடன் வந்தார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே தந்தை இறந்து விட்டதாக வந்த தந்தியை பார்த்து விட்டு இறுதி சடங்குக்கு சென்ற மகன்,அங்கே தந்தையை உயிருடன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருவம் அருகே உள்ள பகண்டை கூட்டு ரோட்டில் மரம் அறுக்கும் பட்டறைவைத்திருப்பவர் கோவிந்தசாமி ஆசாரி.

இவருக்கு கடந்த 1ம் தேதி ஒரு தந்தி வந்தது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் சானிப்பூண்டியில் வசிக்கும்அவரது தந்தை இறந்து விட்டதாக கோவிநத்த சாமி ஆசாரியின் தம்பி பழனி தகவல் கொடுத்து இருந்தார்.

தந்தி வந்த உடன், தனது உறவினர், மாமனார், மாமியார் மற்றும் நண்பர்கள் 40 பேருடன் தனது தந்தை வசித்துவந்த சானிப்பூண்டி கிராமத்திற்கு சென்றார் கோவிந்தசாமி.

இரவு 10 மணிக்கு அங்கே சென்றவர், வீட்டு முன்பு "அப்பா" என்று அலறிக் கொண்டே வேனில் இருந்து தன்உறவினர்களுடன் இறங்கினார்.

ஆனால், வீட்டின் கதவைத் திறந்தவரே கோவிந்தசாமியின் அப்பா கண்ணன்தான். தந்தையைப் பார்த்ததும்கோவிந்தசாமி அதிர்ச்சி அடைந்தார்.

தந்தை கண்ணனுக்கும் ஒரே வியப்பு! மகனைப் பார்த்து, "ஏன் இவ்வளவு பேருடன் மாலையுடன் வந்திருக்கிறாய்"என்று மகனைப் பார்த்து கேட்டார். கோவிந்தசாமியோ "கோவிலுக்கு போகிறோம்" என்று கூறிவிட்டு திரும்பிவிட்டார்.

அங்கிருந்து நேராக பெங்களூருக்கு சென்று, அங்கு வசிக்கும் தன் தம்பியைச் சந்தித்து, "நீதானே அப்பா இறந்துவிட்டதாக தந்தி கொடுத்தாய்" என்று கேட்டார். ஆனால் அவரோ "இல்லவே இல்லை" என்று மறுத்தார்.

சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விசாரித்த போது கோவிந்தசாமி ஆசாரியுடன் முன் விரோதம் கொண்ட யாரோஒருவர்தான், இவருடைய தம்பியின் பெயரில் தந்தி கொடுத்து இருக்க வேண்டும் என்று தெரிய வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+