ஆசிட் வீச்சு .. மாணவிகள் சிகிச்சையை அரசே மேற்கொள்ளும்
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மாணவரால் ஆசிட் வீசப்பட்ட மாணவிகளுக்குத் தேவையானசிகிச்சைக்கு மாநில அரசு உதவும் என்று தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் ராஜேந்திரபிரசாத் கூறியுள்ளார்.
தக்கலை அருகே உள்ள மேக்கா மண்டபம் பகுதியில் மாணவிகளான 2 சகோதரிகளை ஒரு இளைஞர் கேலிசெய்தார். இதுகுறித்து அந்த மாணவி தனது ஆசிரியரிடம் கூறவே ஆத்திரமடைந்த அந்த நபர் மாணவிகள் மீதுஆசிட் வீசினார்.
இதில் முகம் கருகிய நிலையில் இருமாணவிகளும் தக்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தமாணவிகளை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது:
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் இதுபோன்ற கொடூரமான செயல்நடந்திருப்பது கண்டனத்துக்குரியது.
இரு மாணவிகளுக்கும் தேவையான சிகிச்சைகள் குறிப்பாக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டால்அதற்கான செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த சம்பவத்தில் உண்மை நிலையைக் கண்டறிந்துநடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.