மதுரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் பலி: 82 பேர் காயம்
மதுரை:
மதுரை அருகே உள்ள கோவில் திருவிழாவை ஒட்டி நடந்த ஜல்லிக்கட்டு என்றுஅழைக்கப்படும் காளை மாடுகளை பிடிக்கும் வீர விளையாட்டின் போது மாடு முட்டிஒருவர் உயிரிழந்தார். 82 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டில் முரட்டுக் காளை மாடுகள் பல ஊர்களிலிருந்தும் அழைத்துவரப்படும். சிலர் காளைகளை ஜல்லிக்கட்டுக்கென்றே வளர்த்துப் பழக்கப்படுத்துவதும்உண்டு.
காளைகள் மேள தாள சத்தங்களுக்கிடையே விளையாட்டுக்கென உள்ள மைதானத்தில்(கிரவுண்ட்) விரட்டி விடப்படும். மாட்டின் கழுத்தில் பணமுடிப்பு கட்டப்பட்டிருக்கும்.மாட்டை அடக்கி பிடிக்கும் இளைஞர்கள் அந்த பண முடிப்பை எடுத்துக் கொள்ளலாம்.சில சமயம் மாட்டின் கழுத்தில் பண முடிப்புடன் தங்கச் சங்கிலியும் கட்டப்பட்டிருக்கும்.
மாட்டை கோபப்படுத்தவதற்கென்று தாரை, தப்பட்டைகள் முழக்கப்படும். வாத்தியஓசைகளை கேட்டு காளைகள் மூர்க்கமாக ஓடத் துவங்கும். சிலர் மாடுகளுக்கு சாராயம்ஊத்தி விடுவதும் உண்டு.
காளையை அடக்குவதெற்கென்று பல இளைஞர்கள் போட்டி போடுவர். இந்த வீரவிளையாட்டின் போது காளைகள் முட்டி பலர் படுகாயமடைவதும், சிலர் இறப்பதும்சகஜமானது.
பாண்டி கோயில்:
மதுரைக்கு அருகே உள்ள மேலமடையில் இருக்கும் பாண்டி கோவில் திருவிழாவைஒட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
இதில் மாடுகளை அடக்க சென்ற இளைஞர்கள் பலருக்கும் மாட்டின் கொம்பு குத்தியும்,கால்களால் மிதிபட்டும் காயம் ஏற்பட்டது. இதில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். இவர்களில் 32 வயதான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல்ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து போனார்.
காயமடைந்த மேலும் 82 பேரும் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.