மோசடி ஏலச் சீட்டு பெண் தற்கொலை: பணம் போட்டவர்கள் கதறல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் போலி நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்து, விஷம் குடித்த நிலையில் சென்னைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் இறந்தார்.

சென்னை ஏழுகிணறு பகுதியில் பல பெண்களிடம் ஏலச் சீட்டு என்ற பெயரில் பணம் வசூலித்து வந்த சுலோச்சனாஎன்ற பெண் ரூ.3 கோடி அளவுக்குப் பணம் சேர்ந்ததும் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்தபெண்கள் போலீஸில் புகார் கொடுத்தனர்.

தலைமறைவாகி விட்ட சுலோச்சனாவைப் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பதி அருகே விஷம் குடித்தநிலையில் போலீஸாரால் சமீபத்தில் சுலோச்சனா மீட்கப்பட்டார். அவரை சென்னையிலுள்ள தனியார்மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை இரவு சுலோச்சனா இறந்தார்.

சுலோச்சனா இறந்த தகவலை கேட்டவுடன், பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குதிங்கள்கிழமை கதறியபடி வந்தனர். சுலோச்சனா இறப்புக்காக அவர்கள் அழுது கொண்டு ஓடிவரவில்லை,

தங்களது பணம் திரும்பக் கிடைக்காதா என்று அந்த ஏழைப் பெண்கள் கதறிக் கொண்டிருந்த காட்சி பரிதாபமாகஇருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+