சென்னையில் குடிசையில் வாழ்வோர் எண்ணிக்கை 20 லட்சம்!
டெல்லி:
இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களான டெல்லி, கோல்கத்தா, மும்பை மற்றும்சென்னை நகரங்களில் குடிசைகளில் 15.4 மில்லியன் பேர் வாழ்ந்து வருவதாக நகர்புறமேம்பாடு மற்றும் ஏழ்மை ஒழிப்புத்துறை அமைச்சர் பன்டாரு தத்தாரேயாதிங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் ராஜ்யசபாவில் கூறுகையில், டெல்லியில் 3.3 மில்லியன் மக்களும்,கோல்கத்தாவில் 4.3 மில்லியன் மக்களும், மும்பையில் 5.9 மில்லியன் மக்களும்,சென்னையில் 2 மில்லியன் மக்களும் குடிசைகளில் வசித்து வருகிறார்கள்.
நகர்ப்புறத்தில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும்,ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புவழங்கவும் அரசு ஸ்வர்ணஜெயந்தி ஷஹாரி ரோஜார் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 9ம் வகுப்புவரை படித்தவர்கள் சுய தொழில் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
குடிசைகளில் வாழ்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு தேசியகுடிசைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி குடிசையில் வாழும் மக்கள் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் பெற நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications