கோவை பள்ளியில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் ஒரு பள்ளியில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் வந்தது. இறுதியில் அது வெறும்புரளி என்று தெரிய வந்தது.
கோயம்புத்தூர்-அவினாசி ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அந்தப்பள்ளியின் முதல்வர் ரங்கம்மாளுக்குப் போன் வந்தது.
இதையடுத்து, உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுத்தார் ரங்கம்மாள்.
உடனே வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சகிதம் அந்தப் பள்ளியைப் போலீசார் முற்றுகையிட்டனர்.பள்ளி முழுவதையும் சல்லடை போட்டுத் தேடிப் பார்த்த பிறகும், குண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இதனால், குண்டு வைத்திருப்பதாக வந்த தொலைபேசித் தகவல் வெறும் புரளிதான் என்று தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications