ஜெயலலிதாவின் டெல்லி பயணம் திடீர் ரத்து
சென்னை:
தனது டெல்லி பயணத்தை முதல்வர் ஜெயலலிதா திடீரென ரத்து செய்துவிட்டார்.
செவ்வாய்க்கிழமை காலை டெல்லி செல்வதாக இருந்த ஜெயலலிதா பின்னர் மாலையில் செல்வார் எனக்கூறப்பட்டது.
ஆனால், தனது டெல்லி பயணத்தை ஜெயலலிதா ரத்து செய்துவிட்டதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக இருந்து வரும் முதுகு வலி திடீரென அதிகரித்துவிட்டதாலும், நீண்ட தூரம் பயணம் செய்யமுடியாத நிலை உருவாகியிருப்பதாலும் தனது பயணத்தை ஜெயலலிதா ரத்து செய்துவிட்டதாக முதல்வர் அலுவலகம்தெரிவித்துள்ளது.
தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக விவாதிக்க திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி. பந்த்தைச்சந்திக்க ஜெயலலிதா டெல்லி செல்ல இருந்தார்.
இப்போது ஜெயலலிதாவுக்குப் பதில், நிதியமைச்சர் பொன்னையன் மற்றும் தலைமைச் செயலாளர் சங்கர் ஆகியோர்டெல்லி செல்வர்.
கருணாநிதி கைது விவகாரத்துக்குப் பின் ஜெயலலிதா மீது பெரும் கடுப்பில் இருக்கிறது மத்திய அரசு. டெல்லிக்குச்சென்றால், பிரதமரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக வேண்டும். ஆனால், கருணாநிதி கைது விவகாரத்தில்தொடர்புடைய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றல் விவகாரம், ராஜகோபாலனை மத்திய அரசுப் பணிக்குஅனுப்பாதது என வாஜ்பாய் அரசுடன் பனிப்போர் நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
இதனால், தான் இந்த நேரத்தில் டெல்லி செல்வதை ஜெயலலிதா தவிர்த்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications