For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழில் போட்டிதான் காரணம் என்கிறார் உரிமையாளர்

By Staff
Google Oneindia Tamil News

ஏர்வாடி:

தொழில் போட்டிகாரணமாக மர்ம கும்பல் தீவைத்திருக்கலாம் என்று மனநலக் காப்பகத்தின் உரிமையாளர்முகைதீன் பாதுஷா கூறியுள்ளார்.


இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலுள்ள மனநலக் காப்பகத்தில் நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை ஏற்பட்டதிடீர் தீ விபத்தில் கருகி 25 மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தனர். இன்னும் பலர் படுகாயத்துடன்உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்த மனநலக்காப்பகத்தின் உரிமையாளர் முகைதீன்பாதுஷா மற்றும் அவரதுகுடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் நடந்தது எப்படி என்று இன்னும் தெரியாத நிலையில், பாதுஷா மற்றும் அவரது குடும்பத்தினரிடம்போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் போது பாதுஷா போலீசாரிடம் தெரிவித்ததாவது:

அன்று அதிகாலை நாங்கள் அனைவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று அலறல்சத்தம் கேட்டது. இதையடுத்து நாங்கள் அனைவரும் திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது எங்கள் காப்பகத்தின்கீற்றுக் கொட்டகை தீப்பிடித்து மளமளவென்று எரிந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பகுதி வழியாக சிலர் தப்பி ஓடுவதையும் நாங்கள் பார்த்தோம். ஆனால், அவர்கள் யார் என்றுஎங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. எங்கள் தொழிலில் பொறாமையும் போட்டியும் கொண்டவர்களின்வேலையாக இது இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்என்று பாதுஷா கூறினார்.

இந்தப் புகார் உண்மைதானா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X