"முந்தைய திமுக அரசின் மெத்தனம்தான் காரணம்"
ஏர்வாடி:
ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்துக்கு கடந்த திமுக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்றுமுன்னாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் த.மா.கா எம்.எல்.ஏவுமான சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலுள்ள மனநலக் காப்பகத்தில் நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை 5 மணிக்குஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கருகி 26 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தது எப்படி என்று இன்னும் தெரியாதநிலையில் மனநலக் காப்பக உரிமையாளர் பாதுஷா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான முழு பொறுப்பும் முந்தைய திமுக அரசையே சாரும் என்றுபாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் பற்றிய செய்தியறிந்ததும், அவர் ஏர்வாடிக்கு விரைந்து சென்றுபாதிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஏர்வாடியில் தற்போது ஏற்பட்டிருப்பது மிகவும் துக்ககரமான சம்பவம் ஆகும். கடந்த ஆண்டு ஏர்வாடி மனநலக்காப்பகம் ஒன்றில் நோயாளிகளுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு 11 பேர் பலியானார்கள்.
அப்போது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த நான், "இங்கு மனநோயாளிகள் சங்கிலியால்கட்டப்பட்டிருக்கிறார்கள். மேலும் அறியாமல் அவர்கள் செய்யும் தவறுகளுக்காக அடித்து உதைக்கப்படுகிறார்கள்.இந்த காப்பகங்களில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. எனவே இந்த மாதிரி கொடுமைப்படுத்தும்காப்பகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்" என்றேன்.
மேலும், ஏர்வாடிக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், தனிகிளை ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடம்கேட்டிருந்தேன்.
இவை எல்லாம் முன்பே நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த விபத்தே ஏற்பட்டிருக்காது. ஆனால், இவை எதையும்கடந்த திமுக அரசு செய்ய முன்வரவில்லை.
எனவே, இந்தக் கோரச் சம்பவத்திற்கு முந்தைய திமுக அரசே முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்று கூறினார்பாலகிருஷ்ணன்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications