For Quick Alerts
For Daily Alerts
Just In
படிக்கட்டில் பயணம்... ரூ.67 ஆயிரத்தைப் பறிகொடுத்தார் பயணி
சென்னை:
சென்னையில் ஓடும் பஸ்சில் பையில் வைத்திருந்த ரூ.67,000 பணம் பறிக்கப்பட்டது.
திருவொற்றியூரிலிருந்து திருவேற்காடு செல்லும் பஸ் திங்கள்கிழமை காலை வழக்கம் போல புறப்பட்டுச் சென்றது.
இந்த பஸ்சில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் கட்டுவதற்காக ஒருவர் ரூ.67,000 பணத்துடன் சென்றார்.பணம் இருந்த பையுடன் பஸ் படிக்கட்டின் அருகில் நின்று கொண்டு அவர் பயணம் செய்தார்.
பஸ் புரசைவாக்கம் பகுதியில் சென்றபோது படிக்கட்டில் நின்றிருந்த ஒரு நபர், பணம் வைத்திருந்தவரிடமிருந்துபையைப் பறித்துக் கொண்டு ஓடும் பஸ்சிலிருந்து குதித்து இறங்கித் தப்பினார்.
பணத்தைப் பறிகொடுத்தவர் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் பஸ்சை நிறுத்தச் சொல்லி இறங்கி வேப்பேரிபோலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார்.
போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]