For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மீன் குழம்பு நல்லாயில்லை": கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மீன் குழம்பு நல்லாயில்லை என்று கணவர் திட்டியதால், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


சென்னை ஆர்.கே. நகரைச் சேர்ந்தவர்கள் முருகன்-சுசீலா தம்பதியினர். இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்திருமணம் செய்து கொண்டனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நேற்று (திங்கள்கிழமை) இரவு, தன் கணவனுக்காக, மீன் குழம்பு சமைத்தார் சுசீலா (22).

ஆனால், வீட்டிற்கு வந்து சாப்பிட்ட முருகன், தான் விரும்பிய ருசி இந்த மீன் கறியில் இல்லை என்று கூறி,சுசீலாவைக் கடுமையாகத் திட்டியிருக்கிறார். சுசீலாவும், பதிலுக்குக் கத்த, சண்டை வலுத்தது.

இதையடுத்து, கோபத்தில் வீட்டை விட்டு வெளியே போய்விட்டார் முருகன். இதனால், மிகவும் வெறுத்துப் போனசுசீலா தன் உடலில் மண்ணெண்ணையைத் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

அவர் போட்ட அலறலில், அண்டை வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். உடனே சுசீலாவை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுசீலா இறந்து போனார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X