For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையைக் கலக்கிய ஆட்டோ திருடர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரே ஆட்டோவில் வந்தகொள்ளையர்கள் இரண்டு இடங்களில் சாலைகளில்சென்றவர்களிடம் நகை, பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர்.

தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் காலை 10.30 மணியளவில் நடேசன் பூங்கா பகுதியில் பிராங்க்ளின் என்பவர்நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு ஆட்டோ அவர் அருகே வந்தது. ஆட்டோவில் இருந்த 3 பேர், பிராங்க்ளினைத் தாக்கி அவர்அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். திடீரென நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்றபிராங்க்ளின் உடனடியாக சுதாரித்துக் கொண்டு ஆட்டோ நம்பரை குறித்துக் கொண்டு பாண்டி பஜார் போலீஸில்புகார் கொடுத்தார்.

அது திருட்டு ஆட்டோவின் எண் என்பதை போலீஸார் உணர்ந்தனர். உடனடியாக அந்த ஆட்டோ குறித்துநகரிலுள்ள அனைத்து போக்குவரத்து போலீஸாருக்கும் வயர்லஸ் மூலம் தகவல் பறந்தது.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இதே ஆட்டோஆசாமிகள் நகையைப் பறித்துச் சென்றனர். உடனடியாக அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து போலீஸார்உஷார்படுத்தப்பட்டு ஆட்டோக்களைக் கண்காணித்தனர். ஆனால் ஆட்டோவும், அதில் வந்தவர்களும்பிடிபடவில்லை.

பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர் முழுவதும் இந்தஆட்டோ ஆசாமிகளைத் தேடும் பணியில் போலீஸார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X