கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு சேதம்
சென்னை:
சென்னை வேளச்சேரியில் வீட்டில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதில் தீப்பிடித்து கேஸ் சிலிண்டர் வெடித்தது.இதில் அந்த வீடு கடுமையாகச் சேதமுற்றது.
சென்னை வேளச்சேரி வ.உ.சி. நகரில் வசிப்பவர் ஜேக்கப் செரியன். இவர் தனியார் டயர் கம்பெனியில்பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் திங்கள்கிழமை இரவு சமையல் முடிந்ததும் அனைவரும் தூங்கச்சென்றனர். கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை அப்போது சரியாக மூடாமல் விட்டு விட்டுள்ளனர்.
இரவு முழுவதும் கேஸ் கசிந்து வீடு முழுவதும் பரவியுள்ளது. வீட்டின் ஒரு அறையில் பிரிட்ஜ் உள்ளது. அந்தஅறைக்குள்ளும் கேஸ் பரவியது. இதனால் மின்சார பிளக் பாயிண்ட்டில் கேஸ் பரவியதால் தீப்பிடித்துக் கொண்டது.இதனால் வீட்டின் சமையறை முழுவதும் கருகியது. ஜன்னல்கள் வெளியே உடைத்துக் கொண்டு விழுந்தன.
வீட்டில் வெடிகுண்டு வெடித்து விட்டதாக அஞ்சிய செரியன் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி தப்பினர்.பக்கத்திலிருந்த ஒரு குடிசையும் தீக்கிரையானது. ஆனால் அதில் யாரும் அப்போது இல்லை.
இதையடுத்து, வெடிகுண்டு வெடித்ததாக போலீஸாருக்குத் தகவல் போனது.
போலீஸார் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் கேஸ் சிலிண்டர்வெடித்து விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications