திமுக பேரணிக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் 12ம் தேதி திக சார்பில் நடக்கவுள்ள பேரணிக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.


கருணாநிதி கைதைக் கண்டித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 100 இடங்களில் திமுக சார்பில் கடந்ததிங்கள்கிழமை கண்டனப் பேரணிகள் நடந்தன. இந்நிலையில் 12ம் தேதி, சென்னையில் மாபெரும் பேரணிக்குதிமுக ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பேரணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஷேக் பரீத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவர் தன் மனுவில், பேரணி என்ற பெயரில் வன்முறையைத் தூண்ட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம்தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று கூறி அதிமுக ஆட்சியைக் கலைக்க அவர்கள்தீர்மானித்துள்ளனர். எனவே பேரணிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயசிம்மபாபு, நாகப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்புதன்கிழமை விசாரித்தது.

விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

யூகத்தின் அடிப்படையில் எந்த முடிவுக்கும் வரக் கூடாது. கலவரம் ஏற்படும் என்ற யூகத்தை அடிப்படையாகவைத்து பேரணிக்குத் தடை விதிக்க முடியாது.

ஜனநாயக அமைப்பில் இதுபோன்ற பேரணிகள் நடத்துவதில் தவறில்லை. எனவே திமுகவினர் நடத்தவுள்ளபேரணிக்குத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+