ஜெ.தான் முக்கியமா? - வேலூர் கைதி கேள்வி
சென்னை:
தன்னுடைய வழக்கின் அப்பீல் மனு நீண்ட காலமாக விசாரிக்கப்படாமல் உள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்புதாக்கல் செய்யப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை உடனடியாக விசாரிக்கக் கூடாது என்று கோரிவேலூர் சிறைக் கைதி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ரவி வர்மா என்ற அந்தக் கைதி தனது மனுவில் கூறியுள்ளதாவது:
1996ம் ஆண்டு என் மீது தொடரப்பட்ட வழக்கில் எனக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதைஎதிர்த்து உடனடியாக அப்பீல் செய்தேன். ஆனால் இது இன்று வரை விசாரணைக்கு வரவில்லை.
இந்த நிலையில் டான்சி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதாஅப்பீல் செய்துள்ளார். அது உடனடியாக ஏற்கப்பட்டு விசாரணை நடக்கவுள்ளது. இது சரியல்ல.
முறைப்படி எனது வழக்கை விசாரித்த பின்புதான் ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
அவரது மனு ஏற்கப்படுமா, இல்லையா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications