யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 7 புலிகள் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 விடுதலைப்புலிகள் செவ்வாய்க்கிழமை தப்பிச் சென்றனர்.

இலங்கை விமானப்படை விமானங்கள் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் மறைவிடங்கள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த 2 நாட்களாக இலங்கை விமானப்படை விமானங்கள் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகள்மீதும், மறைவிடங்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

திங்கள்கிழமை யாழ்பாணத்தில் உள்ள கொடிகாமம் அருகே பலாலியில் உள்ள விடுதலைப் புலிகளின் பதுங்குக்குழிகள் மீது ராணுவ விமானங்கள் நடத்தின. இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை தன்னுடைய தாக்குதலைத்தொடர்ந்து நடத்தியது இலங்கை விமானப் படை. தொப்பிகலா என்ற இடத்தில் உள்ள ஜிம் கீலி என்ற புலிகளின்பயிற்சி முகாம்கள் இதில் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இவற்றைத் தொடர்ந்து, 3வது நாளாக புதன்கிழமையும் தாக்குதல் தொடர்ந்து.

விடுதலைப்புலிகளின் மறைவிடங்கள் மீது விமானப்படையினர் தாக்குதல் பயங்கரத் தாக்குதல் நடத்தினர்.சேதமடைந்திருந்த முகாம்களை சீர்படுத்தும் முயற்சியில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் மீதுவிமானப்படை வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியது என்று விமான பைலட்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 7விடுதலைப்புலிகள் செவ்வாய்க்கிழமை தப்பி விட்டனர். போலீசார் உதவியுடன் தப்பிய கைதிகளை தேடும்பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

ஆனால், இதுவரை எந்தப் "புலியும்" சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+