வீரப்பன் சரணடைய நான் கியாரண்டி: கொளத்தூர் மணி
சென்னை:
தமிழக அரசும், வீரப்பனும் விரும்பினால் வீரப்பனை சரணடையச் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்த தயாராகஇருப்பதாக தந்தை பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறி உள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் ராஜ்குமாரை கடத்திய போது பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. அரசு வீரப்பனுடன்பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டதால் நான் காட்டுக்குள் சென்றேன்.
ஒரே முறைதான் நான் காட்டுக்குள் சென்றேன். காட்டைப் பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது.வீரப்பன் தினமும் ஒவ்வொரு இடமாக மாறிச் செல்லவதால் அவன் எந்த இடத்தில் இருப்பான் என்பதும் எனக்குத்தெரியாது.
வீரப்பனைச் சரண் அடையச் செய்வது பற்றி, அரசுக்கு மட்டுமல்ல வீரப்பனுக்கும் விருப்பம் இருக்க வேண்டும்.
அரசுக்கும் வீரப்பனுக்கும் விருப்பம் இருந்தால், வீரப்பனை சரண் அடையச் செய்வது குறித்து பேச்சுவார்த்தைநடத்தும் முயற்சியில் நான் ஈடுபட தயாராக இருக்கிறேன் என்றார் கொளத்தூர் மணி.












Click it and Unblock the Notifications