குடிபோதையில் தகராறு: வாலிபர் அடித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே மாங்காட்டில் நண்பர்களுக்குள் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார்.
மாங்காடு கோவூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரும் நண்பர்கள் வேலு, மெய்யப்பன் ஆகியோர் முட்டமுட்ட மது குடித்துள்ளனர். பின்னர் ஜாலியாக பேசியவாறு வீடு திரும்பினர்.
அப்போது ஏதோ ஒரு விஷயத்திற்காக நண்பர்களுக்கும் விவாதம் எழுந்துள்ளது. அது அடிதடியாக மாறியது.மெய்யப்பனும், வேலுவும் சேர்ந்து முருகனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அடிதடியில் பலத்த காயமடைந்த நினைவிழந்த நிலையில் இருந்த முருகன் அக்கம் பக்கத்தில் இருந்தோரால்மீட்கப்பட்டு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.
ஆனால் திங்கள்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் மரணமடைந்தார். மூளை பாதிக்கப்பட்டு அவர்இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, வேலு மற்றும் மெய்யப்பனை மாங்காடு போலீசார் தேடி வருகின்றனர். இந்த 2 பேரும்அண்ணன்-தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications