கிருஷ்ணன் கோயிலில் புதிய தமிழகம் சாலைமறியல்
மதுரை:
புதிய தமிழகம் கட்சித் தொண்டர் ஒருவரை நசுக்கிக் கொன்ற வாகனத்தின் டிரைவரைக் கைது செய்யக் கோரி,மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ளது கிருஷ்ணன் கோயில். இதன் அருகே உள்ள லக்ஷ்மியாபுரம் என்றகிராமத்தைச் சேர்ந்தவர் தேனுசாமி.
இவர் கடந்த திங்கள்கிழமையன்று லக்ஷ்மியாபுரத்திலிருந்து, சைக்கிளில் கிருஷ்ணன் கோயில் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் வந்துகொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரைஇடித்துவிட்டுச் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தேனுசாமி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பிணமானார். இவர்புதியதமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்.
தேனுசாமியை இடித்துக் கொன்றுவிட்டு தப்பிவிட்ட வாகனஓட்டியைக் கண்டுபிடித்துக் கைது செய்யும்படி புதியதமிழகம் கட்சியினர் செவ்வாய்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து மிகுந்தமதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதியதமிழகம் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் ராமராஜ் தலைமையில் இந்தச் சாலைமறியல் நடந்தது.தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தியபின் கூட்டம் கலைந்து சென்றது.












Click it and Unblock the Notifications