For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்யசபா அதிர்ச்சி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மனநலம்பாதிக்கப்பட்ட 27 பேர் கருகி இறந்ததற்கு ராஜ்யசபை அதிர்ச்சி தெரிவித்தது.

ஏர்வாடியில்.மன நல காப்பகத்திவல் ஏற்ப்ட்ட தீவிபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கருகி இறந்த விஷயத்தைதி.மு.க உறுப்பினர் சி.பி.திருநாவுக்கரசு சிறப்பு குறிப்பு மூலம் ராஜ்யசபையில் செவ்வாய்க்கிழமை எழுப்பினார்.

திருநாவுக்கரசு கூறியதாவது:

தீ விபத்து ஏற்பட்ட ஏர்வாடி மனநல காப்பகத்தில், மனிதாபிமானமற்ற முறையில் மன நோயாளிகளுக்குச் சிகிச்சைஅளிக்கப்படுவாதக தெரியவந்துள்ளது.

தீ விபத்து நடந்த போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததால்அவர்கள் உயிர் பிழைக்க இயலாமல் போய்விட்டது.

மனநல மருத்துவத்திற்காக சிறந்த அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருநாவுக்கரசு கூறினார்.

இதையடுத்து, ராஜ்யசபையில் இருந்த அ.தி.மு.க. எம்.பிக்கள் உள்ளிட்ட அனைத்து எம்.பிக்களும் இந்த சம்பவம்பற்றி அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X