For Daily Alerts
Just In
சாவு எண்ணிக்கை 27 ஆனது
ஏர்வாடி:
ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆகஉயர்ந்தது.
திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்தப் பயங்கரமான தீ விபத்தில், 11 பெண்கள் உள்பட மனநிலைபாதிக்கப்பட்டவர்கள் 25 பேர் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
சங்கிலியால் அவர்கள் கால்கள் கட்டப் பட்டிருந்ததாலும், எப்படித் தப்பிப்பது என்று கூட அவர்களுக்குத்தெரியாததாலும், அந்த அப்பாவி மன நோயாளிகள் கொடூரமான முறையில் இறந்தனர்.
பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒருபெண் மன நோயாளி இறந்தார். பின்னர், செவ்வாய்க்கிழமை இரவு சென்னையைச் சேர்ந்த நாகஜோதி (50) என்றமன நோயாளியும் மருத்துவமனையில் பலியானார்.
இதையடுத்து, இந்தத் தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]