விபத்தில் ஆண்மையிழந்தவருக்கு ரூ.13 லட்சம் நஷ்டஈடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாலை விபத்தில் காயமடைந்து ஆண்மைத் தன்மையை இழந்தவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த இம்தியாஸ் என்ற 26 வயது இளைஞர் அவரது 19-வது வயதில் திருச்சியில் நடந்தசாலைவிபத்தில் காயமடைந்தார். இந்த விபத்தில் அவர் தனது ஆண்மைத் தன்மையை இழந்தார்.
இளம் வயதில் ஆண்மையை இழந்த இம்தியாஸ், தனது வாழ்க்கை பறிபோய் விட்டது. எனவே நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கூறி மோட்டார் வாகன விபத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் இந்த நஷ்ட ஈடு போதாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்தியாஸ் மேல் முறையீடுசெய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர், இம்தியாஸுக்கு ரூ.13 லட்சத்து 60,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications