தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படை தாக்குதல்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடவோர காவல் படையினர் தாக்கிய சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடலோர காவற்படையினர், 30 மீனவர்கள் மேல் திடீர் தாக்குதல்நடத்தினர். அவர்களது மீன்பிடி வலையையும், அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன்களையும் பறித்துச்சென்றுவிட்டனர்.
மீனவர்கள் இலங்கை கடலோர காவல் படையினரால் தாக்கப்பட்டதால் ராமேஸ்வரத்தில் வாழும் மீனவகுடும்பங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. இலங்கை கடற்படையின் இந்த தாக்குதல் எங்களுக்கு மிகுந்த கவலைஅளிக்கிறது என்று அவர்கள் கூறினர்.
முன்னதாக, இந்திய கடலோர காவல்படை டைரக்டர் ஜெனர் ரமேஷ்வர் சிங், புதன்கிழமை சென்னையில்நிருபர்களிடம் கூறுகையில், "வழி தெரியாமல் சென்று விடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று இலங்கை கடற்படையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்"என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மீனவர்கள் தாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது; கவலை அளிப்பதாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications