மாஜி அமைச்சர்கள் மீதான புகார் மனு தள்ளுபடி
சென்னை:
வீராணம் ஏரியைத் தூர்வாரியதில் ஊழல் செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட புகார் மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிமலைசுப்ரமணியம் தள்ளுபடி செய்தார்.
அதில், முன்னாள் அமைச்சர்கள், துரைமுருகன் மற்றும் பன்னீர் செல்வம் உட்பட 4 பேர் ஊழல் செய்துள்ளதாககுற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு முதலில் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி,அசோக்குமார் போதிய சாட்சியங்கள் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் அப்பாத்துரை மேல்முறையீடு (அப்பீல்) செய்தார். நீதிபதி மலைசுப்ரமணியம், இந்த வழக்கு குறித்து போலீசார் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி வருவதால், இந்த வழக்கில்உயர்நீதி மன்றத்தின் உத்தரவு தேவையில்லை என்று கூறினார்.
இதனால், அந்தப் புகார் மனு உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications