தி.மு.க. பேரணிக்கு போலீஸ் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை கண்டித்துவரும் 12ம் தேதி தி.மு.க நடத்த உள்ள கண்டன பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்று சென்னைமாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுதி.மு.க,தலைவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாககுற்றம் சாட்டப்பட்டது

இதை எதிர்த்து தி.மு.கவினர் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர். வரும் 12ம் தேதி சென்னையில் கண்டனபேரணி நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. இதற்கு போலீஸ் அனுமதியும் கோரப்பட்டு இருந்தது.

இதையடுத்து, பேரணி நடத்துவதற்கான அனுமதியை திமுகவினருக்கு போலீஸ் அளித்துள்ளது. ஆனால்வன்முறையில் ஈடுபட முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.

பேரணி செல்லும் வழியிலும், பொதுக்கூட்டம் நடக்க உள்ள மெரீனா கடற்கரையிலும் பலத்த காவல் போடப்படும்.12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர பறக்கும் படையின் சில கம்பெனியும்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

இந்தப் பேரணியால், பொதுச் சொத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த விதமான சேதமும் ஏற்படாமல்பாதுகாக்கப்படும்.

இந்த பேரணி சைதாப்பேட்டை லிட்டில் மவுன்ட்டில் இருந்து துவங்கி கிண்டி மேம்பாலம், நந்தனம் தேவர் சிலை,சாமியர்ஸ் சாலை, டி.டி.கே. சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக சென்று மெரினா கடற்கரையில்முடிவடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+