ஓசி பயணிகளிடம் ரூ.76,155 அபராதம் வசூல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகர பஸ்களில் டிக்கெட் வாங்காமல் ஓசியில் பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ.76,155 அபராதம்வசூலிக்கப்பட்டது.

சென்னை நகரில் ஒடும் அரசு பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. கண்டக்டர்கள் உட்கார்ந்த இடத்திலேயே டிக்கெட் தருவது, சரியான முறையில்செக்கிங்குகள் நடக்காமல் இருப்பதே இதற்குக் காரணம் என்று போக்குவரத்துக் கழகத்தில் பலர் புகார் செய்தனர்.

இதையடுத்து சென்னை நகரில் சமீப காலமாக டிக்கெட் செக்கிங்குள் அதிகரிக்கப்பட்டன. கண்டக்டர்களும்பஸ்சுக்குள் அவ்வப்போது எழுந்து சென்று டிக்கெட் தருமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்கு ஓரளவு பலன்கிடைத்துள்ளது.

டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூ.76,155 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இது கடந்த இரண்டு நாட்களில் கிடைத்த வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, பஸ்களில் பெண்களிடம் கேலி செய்பவர்கள், பிக் பாக்கெட் அடிப்பவர்களைக் கண்காணிக்க சாதாரணஉடையில் போலீஸார் உலா வந்த வண்ணம் உள்ளனர். அரசு செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+