For Daily Alerts
Just In
அரசு மருத்துவமனையில் அமைச்சர் அதிரடி சோதனை
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் புதன்கிழமை திடீர்சோதனை மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகள் கேட்டார்.
அமைச்சர் செம்மலை அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறார். அந்தவரிசையில், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு புதன்கிழமை முற்பகல் 12 மணியளவில் சென்றார்.
ஒவ்வொரு வார்டாக சுற்றிப் பார்த்த அவர் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஒழுங்காக பணிக்குவருகிறார்களா என்று கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகள் கேட்டறிந்தார்.
நோயாளிகள் கூறிய புகார்களை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு டாக்டர்களைக் கேட்டுக் கொண்டார்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]