19 தமிழக மீனவர்களை விடுவிக்க யாழ். கோர்ட் உத்தரவு
கொழும்பு:
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களில் மேலும் 19 பேரை விடுவிக்க யாழ்ப்பாணம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் இந்தியா, இலங்கை ஆகிய 2 நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள், எல்லைதாண்டி மீன்பிடிக்கும் போதுபிடிபட்டால் அவர்களுக்கு ஒருமுறை பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி, 2 நாடுகளின் சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க 2 நாடுகளுமே முயற்சி செய்துவருகின்றன.
இலங்கை சிறைகளில் இருக்கும் 66 மீனவர்களில், கடந்த மாதம் 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சிய 43மீனவர்களில், மேலும் 19 பேரை விடுவிக்க யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சில நடைமுறைகள் வகுக்கப்பட்ட பின் நடுக்கடலில் இந்த 19 மீனவர்களும் இந்திய அரசிடம்ஒப்படைக்கப் படுவார்கள் என்று இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவர்கள் தவிர இன்னும் சிறையிலிருக்கும் 24 பேரின் விடுதலை பற்றி முடிவாகவில்லை.












Click it and Unblock the Notifications